Feb 10, 2011

நீயா நானா

வர வர இந்த கோபிக்கு புத்தி கெட்டுபோச்சு. தலைப்பும் மேட்ட்ரும் தீர்ந்து போச்சா?. திருமணத்திற்குபின் பெற்றோரின் தலையீடு சரியா தவறா என்று ஒரு தலைப்பு. சமூகத்தில் அனுபவம் மிக்க பெற்றோரின் புத்திமதியை தலையீடு என்று தலைப்பிட்டு ஒரு ஷோ. புத்திமதி சொன்னா தலையீடா? இந்த மாதிரி ஆளுகளால சமூகம் சீக்கிரம் கெட்டுப் போயிரும்.

அதில் நடுநாயகமாக இருக்கை கொடுத்து கருத்துச் சொல்ல நடுவர்களை உட்காரவைத்து இருந்தார். பல பெரிய மனுசனுங்க உட்கார்ந்து தங்கள் தரப்பு வாதங்களை சொல்லும் போது அதற்கு நடுவர்களாக பிரமிட் நடராஜனும், தீபக் என்றொரு டிவி நடிகரையும் உட்கார வைத்து இருக்கிரார். பிரமிட் நடராஜனைக் நடுவராக ஏற்றுக் கொள்ளலாம். வயதில் மூத்தவர் அனுபவப் பட்டவர். இந்த தீபக் எந்தவகையில் அந்த இடத்திற்கு தகுதியானவர். இது கலந்து கொண்ட மற்றவர்களை அசிங்கப்படுத்துவது போல் இருக்கிறது. ஒருவேளை தீபக்கை அசிங்கப்படுத்த கோபி செய்த முயற்சியா?

மொத்தத்தில் இந்தமாதிரி ஷோவெல்லாம் செல்லாது செல்லாது.